கடந்த திங்கட்கிழமையன்று ஆப்பிரிக்க நாடான கானாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது .இதில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு இடையே அதிபர் தேர்தல் நடந்ததால், அங்கு வழக்கமான அரசியல் பேரணிகள் நடைபெறவில்லை.
இதில் சமூக ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சிகள் வழியேதான் பிரசாரங்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் நானா அகுபோ அடோவுக்கும், முன்னாள் அதிபர் ஜான் மகாமாவுக்கும் இடையே கடுத்த போட்டி நிலவியது. 

இந்நிலையில் தற்போது , பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதில் அதிபர் நானா அகுபோ அடோ குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபர் பதவியை கைவசம் ஆக்கி கொண்டுள்ளார். 

இந்த தேர்தலில் அவருக்கு 51.6 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. மேலும் ஜான் மகாமாவுக்கு 47.4 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன . இதில் இரண்டாவது முறையாக கானாவில் நானா அகுபோ அடோ அதிபர் பதவியை அடைந்திருப்பதை அவரது ஆதரவாளர்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள் .