மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இதனால், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் சோகுரா, பாங்காஸ் ஆகிய இரு நகரங்களை குறிவைத்து நேற்று கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். 

இந்த கோர தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 12 பேர், பொதுமக்கள் என மொத்தம் 23 பேர் உயிரிழந்தனர்.