தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்தது. அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த மண் டலமாகி அடுத்த 36 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறி புயலாக தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி இன்று (30-11-2017) அதிகாலை குமரி கடலில் புயல் சின்னம் உருவானது. அதிகாலை 2.30 மணிக்கு இலங்கையின் கல்லே நகரில் இருந்து 185 கி.மீ. தொலைவிலும், கன்னியா குமரியில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கில் 210 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது.

தீவிர புயலாக மாறி கன்னியாகுமரியை நோக்கி நெருங்கி வருகிறது. தற்போது 70 கி.மீ. தொலை வில் குமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.அடுத்த 36 மணி நேரத்தில் 20 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் லட்சத்தீவு நோக்கி மெதுவாக நகர்ந்து வரும்.

புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சரிந்தன. நாகர்கோவிலில் மின்சார டிரான்ஸ்பார்மரும் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிந்து விழுந்தது.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.

வீடுகளும் சேதமடைந்தது.
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்டத்தின் உட்பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு போக்குவரத்தும் சீராக நடைபெறவில்லை. இதனால் அலுவலகம் செல்வோர் அவதிக்கு ஆளானார்கள்.

இதற்கிடையே அந்தமான் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தொடர்ந்து அது புயலாக தீவிரம் அடையும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி கடலில் நிலை கொண்டுள்ள புயல் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் போது அந்தமான் கடலில் புயல் உருவாகி தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வரும். இந்த இரு புயல்களையும் வானிலை மைய நிபுணர் கள் கண்காணித்து வருகி றார்கள். காற்றின் வேகம், வீசும் திசையைப் பொறுத்து புயலின் தீவிரம் கணிக்கப் பட்டு வருகிறது.

அந்தமானில் உருவாகும் புதிய புயலால் வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட் டங்களில் இன்னும் 3 நாட்க ளில் மிக பலத்த மழை பெய்யும்.
இந்த புயல் சென்னை அருகே மையம் கொண்டு ஆந்திர கடற்கரை பகுதியை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.



0 Comments