கம்பாலாவில் உள்ள மகெரேரே பல்கலைக்கழகத்தின் (Makerere University) விவகாரங்களில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள விசாரிக்கப்படும் குழுவின் தலைவர் ஆபெல் வெண்டைர் (Abel Rwendeire), பூட்டப்பட்டிருக்கும் பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்க ஜனாதிபதி முசேவெனிக்கு (Museveni, President Of Uganda) அழைப்பு விடுத்துள்ளார்.
![]() |
Abel Rwendeire |
அவர், பல்கலைக்கழகம் மூடப்பட்டு இருப்பதால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பல்கலைக்கழகம் திறந்தால், எங்களுடைய வேலையை செய்ய சிறப்பானதாக இருக்கும், என்று கூறினார். இதை அவர், உகாண்டா ஊடக நிலையத்தில் (Uganda Media Centre) நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
![]() |
Makerere University |
மகெரேரே பல்கலைக்கழகத்தை விசாரிக்கப்படும் குழுவை (Visitation Committee), அதிபர் முசேவெனி பல்கலைக்கழகம் மூடப்பட்ட பிறகு நியமித்தார். பல்கலைக்கழக ஊழியர்கள் 28 பில்லியன் (Shs28bn) உகாண்டா ஷில்லிங்ஸ் ஊக்கத்தொகை நிலுவையில் உள்ளதை தொடர்ந்து, வேலைநிறுத்தம் செய்து வந்த நிலையில், பல்கலைக்கழகம் மூடப்பட்டது.
0 Comments