சண்டிகரை சேர்ந்த ஹர்ஷத் சர்மா (வயது 16) இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கிராபிக் டிசைனிங் படித்துள்ள இவர் உலகின் முண்ணனி இணையத் தொழிநுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் கூகுள் நிறுவனம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். ஆன்லைன் மூலமாகவே நேர்முக தேர்விலும் வெற்றி பெற்றார்.
கூகுள் நிறுவனத்தில் தேர்வாகி உள்ள ஹர்ஷத் சர்மாவிற்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சி தற்போது நிறைவடைந்துள்ளதால் மாதத்திற்கு 12 லட்சம் ரூபாய் சம்பளத்தில் கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். பயிற்சி அளித்து கொண்டிருக்கும் போது மாதம் 4 லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற்று வந்துள்ளார். ஹர்ஷத் சர்மா இந்த மாதத்திற்குள் கூகுள் நிறுவனத்தில் விரைவில் கிராஃபிக் டிசைனிங் பணியில் சேருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது கனவு நிறைவேறிவிட்டது எனது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என ஹர்ஷத் சர்மா கூறியுள்ளார். ஹர்ஷத் சர்மா அரியானா மாநிலம் குருஷேத்ராவில் உள்ள மதானாவை சேர்ந்தவர். இவர் 12-ம் வகுப்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவை தேர்ந்தேடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர் கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளது இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.