உகாண்டா அதிபர் யோவேரி முசவேனி கொரோனா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நாட்டு தலைவர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உகாண்டா அதிபர் யோவேரி முசவேனி கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் நிலவி வரும் அச்சத்தை போக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் 2 கோடியே 19 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.