டெல்லியில் உள்ள பிரபல ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த நஜீப் அகமது என்பவரை கடந்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து காணாமல் போன நஜீப் அகமதுவை கண்டுப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் பல்கலைக்கழக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாயமான மாணவரை போலீஸ் சிறப்புக்குழு அமைத்து தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று டெல்லி போலிசுக்கு ராஜ்நாத்சிங் உத்தரவிட்டு இருந்தார். ஆனால், சிபிஐக்கு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நஜீப் அகமதுவின் தயார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கடந்த சில தினங்களுக்கு முன் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.